மீண்டும் கொரோனா அலையா?மக்களே உஷார்..

இந்தியாவில் 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்து வருகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் கடந்த வாரத்தில் 2,321 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 31.8 சதவீதம் ஆகும். அம்மாநிலத்தில் வாராந்திர பாதிப்பு 13.45 சதவீதத்தில் இருந்து 15.53 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
மிசோரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 814 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வாராந்திர பாதிப்பு 14.38 சதவீதத்தில் இருந்து 16.48 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரு வாரத்தில் 794 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் ஒரு வார பாதிப்பு 724-ல் இருந்து 826 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல அரியானாவில் வாராந்திர பாதிப்பு 367-ல் இருந்து 416 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் 5 மாநிலங்களிலும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் 5 மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.கொரோனா பரிசோதனை, கண்காணித்தல் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொற்று மற்றும் அதன் பரவல், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை கண்டறிதலும் மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.

images 32 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories