வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உட்பட
சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் அதிகபட்சம் 35 டிகிரிசெல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




