நள்ளிரவில் சிக்னலில் ரயில் நிறுத்தி பயணிகளிடம் நகை பணம் கொள்ளை..

திருப்பதி-செகந்திராபாத் ஏழுமலையான் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலில் நள்ளிரவில் சிக்னலில் ரயில் நிறுத்தி பயணிகளிடம் நகை கொள்ளை சம்பவம் நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த ரயில் கொள்ளை சம்பவம் ரெயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பா காலா, குண்டக்கல், குத்தி வழியாக செகந்திராபாத்திற்கு தினமும் ஏழுமலையான் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிக்கு திருப்பதியிலிருந்து ரெயில் பயணிகளுடன் புறப்பட்டது.

நள்ளிரவு 1 மணி அளவில் ரெயில் குத்தி மண்டலம் புரக்கபள்ளி ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரெயிலை மெதுவாக ஓட்டிச்சென்று நிறுத்தினார். நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த 20க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பல் திடீரென ரெயிலில் ஏறினர்.

அவர்கள் ரெயிலில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பி கத்தி மற்றும் இரும்பு ராடுகளை காட்டி மிரட்டி பயணிகள் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை பறித்தனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

உயிருக்கு பயந்து பெண் பயணிகள் தாங்கள் அணிந்திருந்த செயின் வளையல் கம்மல் உள்ளிட்ட நகைகளை கழற்றிக் கொடுத்தனர். ஒரு சில பயணிகள் நகை பணத்தை தர மறுப்பு தெரிவித்தனர். அவர்களை சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்து நகை பணத்தை பறித்துக் கொண்டனர். கொள்ளையடித்த நகை, பணம் மற்றும் பொருட்களை மூட்டை கட்டி திருட்டு கும்பல் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து புரக்கபள்ளி ரெயில்வே போலீசார் மற்றும் குத்தி போலீசாருக்கு ரெயில் பயணிகள் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பயணிகளிடம் இருந்து எவ்வளவு நகை பணம் கொள்ளை போனது என தெரியவில்லை. இது குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

உள்ளூரை சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? அல்லது வடமாநில கும்பல் கைவரிசை காட்டினரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

திருட்டு கும்பல் ரெயில் சிக்னலை துண்டித்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடந்த புரக்கபள்ளி ரெயில் நிலையம் அருகே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் ரெயில்வே சிக்னலை துண்டித்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. அப்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரெயில்வே சிக்னலை துண்டித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

images 25 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories