தண்ணீர் வரத்து குறைந்ததால்ஸ திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவியை பார்த்து திரும்பி சென்றனர். தண்ணீர் வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது





