வெயிலிலிருந்து காக்க ஆட்டோக்காரர் செய்த ஐடியா! நெட்டிசன்ஸ் பாராட்டு!

Published:

auto - 2026

தற்போது கோடை காலம் தொடங்கி நாட்டின் பல பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏப்ரல் மற்றும் அடுத்த மே மாதம் முழுதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலர் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார்.

இந்த வீடியோவை கிரீன்பெல்ட் மற்றும் சாலை இன்ஸ்டியூட்டின் தலைவர் எரீக் சோல்ஹீம் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ரிக்ஷாவின் மேல் புற்களை வளர்த்தும், பக்கவாட்டில செடி கொடிகளை வளர்த்தும் பார்க்கவே குளிர்ச்சியாக இருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்து கோடைக்கு ஏற்ற ஐடியா என பலர் இவரை பாராட்டி வருகின்றனர். அத்துடன் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img