பாண்டா குட்டி.. பாதுகாவலருடன் லூட்டி!

Panda bear - 2026

பெரும்பாலும் பாண்டா கரடி குட்டிகள் குழ்நதைகளை போல அழகாக குறும்புகளை செய்து பலரது கவனத்தையும் வெகு விரைவாக ஈர்த்துவிடும்.

பிறக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் பாண்டா கரடி குட்டிகள் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பின்னர் தான் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்ததாக மாறுகிறது. அதுமட்டுமல்லாது இவற்றிற்கு பிறந்த 40 நாட்கள் கழித்து தான் கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே பாண்டா கரடி குட்டிக்கு உயிரியல் பூங்கா பாதுகாவலர் ஒருவர் குழ்நதைகளுக்கு பால் கொடுப்பது புட்டி பால் கொடுத்த காட்சி வைரலாகி வந்த நிலையில், தற்போது ஒரு பாண்டா குட்டி பூங்கா பாதுகாவலரிடம் குறும்பாக சண்டை செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில், அழகிய பாண்டா கரடி குட்டி ஒன்றும் அதனருகில் பச்சை நிற உடையணிந்து கொண்டு பூங்கா பாதுகாவலரும் இருப்பதை காணலாம். அந்த பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் பாண்டா குட்டியை, பாதுகாவலர் வம்பு இழுக்கிறார்.

அப்போது அந்த பாண்டா கரடி குட்டி அவருக்கு நச்சு நச்சென்று பன்ச் விடுகிறது, இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் பாண்டாவை தூக்கி கொண்டும், பிடித்து இழுத்தும் வம்பு செய்கிறார்.

பின்னர் அந்த கரடி குட்டி ஒரு கூடையினுள் செல்கிறது, அதனைத்தொடர்ந்து அடுத்த கிளிப்பில் அது அவரை விரட்டிக்கொண்டு செல்கிறது. அவர் கரடி குட்டிக்கு பயந்து ஒரு மேடையின் மீது ஏறி நிற்கிறார், இருப்பினும் அது அவரை பிடிக்க முயல்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காட்சிக்கு பின்னணியாக அமைக்கப்பட்டுள்ள இசை இந்த வீடியோவிற்கு ஊடுதல் பலத்தை அளிக்கிறது.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, பாண்டா கரடி குட்டியின் செயலை கண்ட பலரும் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories