கன்றுக்குட்டியின் காலைக் கவ்விய மலைப்பாம்பு.. பதற வைக்கும் காட்சி!

Published:

Calf - 2026

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் நுழைந்து கன்றுக்குட்டி ஒன்றின் காலை கவ்விப்பிடிக்கும் வீடியோ காண்போரை திகிலடைய வைத்துள்ளது..

அந்த வீடியோவில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைந்து வைத்துள்ள இடத்திற்குள் தனக்கென உரித்தான பாணியில் சத்தமே இல்லாமல் மெல்ல நுழைகிறது.

அங்கு இரண்டு கன்றுகுட்டிகள் பின்னால் வரும் ஆபத்து தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றன. மெதுவாக அவற்றை நோக்கி முன்னேறும் மலைப்பாம்பு, அதில் ஒரு கன்றுகுட்டியின் காலை கடிக்கிறது.

இதனால் வலி தாங்காமல் கதறியபடியே கன்றுக்குட்டி அங்கும், இங்கும் ஓடுகிறது. அப்போதும் மலைப்பாம்பு தனது பிடியை விடாமல் கவ்விக் கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கன்று குட்டி எவ்வளவு போராடியும் மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. கன்று தப்பியதா அல்லது மலைப்பாம்புக்கு இரையாகிவிட்டதா என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவை வைல்டு லைஃப் அனிமல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ‘கன்றுகுட்டி மீது பாம்பு தாக்குதல்’ என்ற கேப்ஷன் உடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதனை படம் பிடித்த நபரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். பாம்பு கன்றுக்குட்டியை தாக்குவதை படமெடுத்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, அதனை பாம்பிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாமே? என சரமாரியாக வெளுத்து வாங்கி வருகின்றனர். ‘

இந்த வீடியோ எல்லாம் இப்போது அவசியம் இல்லை… கன்றுக்குட்டிக்கு உதவுவது தான் முக்கியம்’. ‘எப்படியாவது அந்த கன்றுக்குட்டியை காப்பாற்றுங்கள்’ என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img