சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை சுரண்டையிலா இருந்து காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்தநிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது38), முத்துக்குமார்(34), பொன்ராஜ்(28) ஆகிய 3 பேரும் காரில் மதுரை நோக்கி சென்றனர்.

அவர்கள் 3 பேரும் பால் வியாபாரிகள் ஆவர். அவர்களது கார் நள்ளிரவு11.15 மணி அளவில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தது. அங்கு பாஸ்ட் டேக் வாகனங்கள் செல்லக்கூடிய வழியில் அவர்களது கார் சென்றது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களது காரை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

சென்சாரில் காரின் எண் பதிவதற்காக காரை பின்னால் தள்ளி நிறுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமார், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை ஏர் பிஸ்டல் காட்டி சுட்டு விடுவதாக சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரும் சுங்கச்சாவடியில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். காரில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கப்பலூர் சுங்கச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி ஊழியர்களை காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சி மற்றும் அவர்கள் வந்த கார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்தது.

துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்கள் வந்த கார் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தது என்பதால், மீண்டும் இந்த வழியாகத்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று போலீசார் கருதினர். இதனால் அவர்கள் மீண்டும் வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இந்த நிலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர், கப்பலூர் தொழிற்பேட்டை அருகே உள்ள டீக்கடையில் நின்று என்ன செய்யலாம் என பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த திருமங்கலம் போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களது காரை சோதனை செய்தபோது ஒரு ஏர் பிஸ்டல் மற்றும் துப்பாக்கி இருந்தது. அதனையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Entertainment News

Popular Categories