டெபிட், கிரெடிட் கார்டுகள்.. புதிய வழிகாட்டுதல்கள்: RBI!

creadit card - 2026

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வரும் ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜூலையில் அறிமுகமாக உள்ள புதிய வழிகாட்டுதல்கள் பேமெண்ட் பேங்க்ஸ், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர்த்து பிறவற்றிற்கு பொருந்தும்.

அதே போல புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காத பட்சத்தில் வங்கிகள் மற்றும் NBFC-க்களுக்கு அபராதங்களையும் RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

உதாரணமாக வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதனிடையே புதிய விதிகளின் படி ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் நிகர மதிப்புள்ள வங்கிகள் இப்போது கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இத்தகைய வங்கிகள் சுயமாகவோ அல்லது பிற கார்டு வழங்கும் வங்கிகள் (card-issuing banks) அல்லது NBFC-க்களுடன் கூட்டாகவோ கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எனினும் கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்வதற்காக தனி துணை நிறுவனங்களை அமைப்பதற்கு, இந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவைப்படும்.

வங்கிகள் தங்கள் போர்டுகளின் ஒப்புதலுடன் ஒரு விரிவான டெபிட் கார்டு வழங்கல் கொள்கையை உருவாக்கி, இந்தக் கொள்கையின்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்கலாம்.

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்க விரும்பும் வங்கிகளுக்கு முன் அனுமதி தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதற்கிடையில் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks) தங்கள் ஸ்பான்சர் வங்கி அல்லது பிற வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்க புதிய விதி அனுமதிக்கிறது.

குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.100 கோடி கொண்ட NBFC-க்கள் மத்திய வங்கியிடமிருந்து முன் அனுமதி பெற்ற பிறகே கிரெடிட் கார்டுகளை வழங்கலாம்.

ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறாமல், NBFC-க்கள் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், சார்ஜ் கார்டுகள் அல்லது அதுபோன்ற தயாரிப்புகளை விரிச்சுவலாக அல்லது பிஸிக்களாகவோ வழங்காது என்று RBI தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்டுகளை வழங்க கிரெடிட் கார்டு விண்ணப்பத்துடன் வட்டி விகிதம் மற்றும் கட்டணங்களின் அளவு போன்ற கார்டின் முக்கிய அம்சங்களைக் கொண்ட ஒன்-பேஜ் கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட்டை (one-page Key Fact Statement) கார்டு வழங்குநர்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்களை அட்டை வழங்குநர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

தொலைந்த கார்டுகள், கார்டு மோசடிகள் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வாடிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க இன்சூரன்ஸை அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க கார்டு வழங்குநர்கள் பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதே போல கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கும் மேலாக வாடிக்கையாளரால் ஆக்டிவேட் செய்யப்படாமல் இருந்தால், அதை ஆக்டிவேட் செய்ய கார்டுபெற்றவரிடமிருந்து OTP அடிப்படையிலான ஒப்புதலை பெறுமாறு கார்டு வழங்குநர்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

சேவிங்ஸ் பேங்க் / கரண்ட் அக்கவுண்ட்ஸ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெபிட் கார்டுகள் வழங்கப்படும். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரை டெபிட் கார்டு வாங்க கட்டாயப்படுத்தாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories