இந்தியாவில் அடுத்தடுத்து புது புது அவதாரமெடுத்து பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வரும் நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது.
தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை கோவாக்சின் நிறுவனம் தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பு குறித்து தகவலை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





