இந்தியாவில் தற்போது நிலக்கரி தேவை அதிகரித்துள்ள நிலையில் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கூடுதல் நிலக்கரி ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது.
இது குறித்து ரயில்வே தலைவர் வி.கே.திரிபாதி கூறியதாவது, கடந்தாண்டை விட நிலக்கரிக்கான தேவை மற்றும் நுகர்வு இந்தியாவில் 20 சதவீதம் கூடுதலாக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அதிகளவு நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கூடுதல் நிலக்கரி ரயில்களை இயக்குகிறோம். மெயில் , விரைவு ரயில்களை விட அதிக முன்னுரிமையில் நிலக்கரி ரயிலை இயக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




