சென்னை விமான நிலையத்தில் டிரங்கிடு ரேடியோ சேவை அறிமுகம்!

Trunkidu Radio Service - 2026

விமான சேவைகளை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்பு கொள்வதற்காக, வாக்கி – டாக்கி சேவை பயன்படுத்தப்படுகிறது.

டி.எம்.ஆர்., எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி, சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலை தொடர்பு சேவை ‘டெட்ரா’ என்ற ஐரோப்பா தொழில்நுட்பத்தில், முழுவதும் டிஜிட்டல் வடிவில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான முனையம் மற்றும் விமான ஓடுபாதைகளில், தடையில்லா சேவை கிடைப்பதற்காக, இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், விமான நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும், இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அந்தந்த நிறுவனங்கள் தனித் தனியாக, மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ மூலம் இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த கருவிகளின் அலைவரிசையை வெளிநபர்கள் யாரும் ஒட்டு கேட்க முடியாது. மேலும் இதில், பேசும் தகவல்கள் அந்தந்த அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள், வருகை, புறப்பாடு உள்ளிட்டவை மேலும் மேம்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories