10 வகுப்பு பொதுத்தேர்வு: வராத மாணவனிடத்தில் தேர்வு எழுதிய மாணவன்!

202205060648295302 10th class Public Exam starts today SECVPF - 2026

சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆப்சென்ட் ஆனவரின் இடத்தில் அமர்ந்து பொதுத்தேர்வெழுதிய மாணவரால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழிப்பாட தேர்வு நடந்தது. இதனிடையே, தமிழ் தேர்விற்கு அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆப்சென்ட் ஆனார்.

அந்த மாணவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அதற்கு அடுத்தபடியாக உள்ள மாணவர் ஒருவர் மாறி அமர்ந்துள்ளார். இதனை சரியாக கவனிக்காத அறை கண்காணிப்பாளர், ஆப்சென்ட் ஆன மாணவருக்கான விடைத்தாளை, மாறி அமர்ந்த மாணவரிடம் வழங்கியுள்ளார்.

சேலத்தில் தேர்வெழுத வராத மாணவர்கள் குறித்து விசாரித்தபோது, தான் தேர்வெழுதியதாக சம்பந்தப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது தான் ஆப்சென்ட் ஆன மாணவருடைய விடைத்தாளில், வேறொரு மாணவர் தேர்வெழுதியதும், தேர்வெழுதிய மாணவர் ஆப்சென்ட் என மாற்றி பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”தற்போது தேர்வுக்கு வந்த மாணவருடைய முகப்புத் தாள் மாற்றப்பட்டது. அதேநேரத்தில், தேர்வறையில் அஜாக்கிரதையாக இருந்த அறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்,” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories