இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது மற்றும் மக்களின் வன்முறை அதிகரித்து வருகிறது.
இப்பிரச்சினை யால் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தமிழக கடற்கரையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





