December 5, 2025, 6:47 PM
26.7 C
Chennai

ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை! பயன்பெறுங்கள்..!

Kendriya Vidyalaya - 2025

ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதியான, ஆர்வமுள்ள பெற்றோர் நேரடியாக பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி அலுவலகத்தில் இன்று முதல் (மே 13.,) முதல் வரும் 18ம் தேதிவரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின் 73051 60907 என்ற மாணவர் சேர்க்கைப் பிரிவு உதவி எண்ணை அழைக்கலாம் என கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022-23 கல்வியாண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்கை தொடங்கியது.

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றவர், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வரும் பிரிவினர், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் எனப் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த சேர்க்கையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினரில் நிரப்பப்படாமல் உள்ள சில இடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகம் முடிவு செடித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் (மே.13.,) முதல் வரும் 18ம் தேதிவரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி பணிமாறுதல்களால் பல இடங்களில் பணியாற்றும் சூழலில் அவர்களின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான கல்வியை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

பிறகு இராணுவத் துறையில் தனியாக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை அளித்து வருகிறது. இப்பள்ளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories