முள்ளம்பன்றி, குரங்கோடு பிடிப்பட்ட இளைஞர்!

monkey 1 - 2026

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது.

அதில் வந்த பயணிகளையும், உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
அவரிடம் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடை ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள் அதை திறந்து பார்த்துள்ளனர்.

அதை சோதனை செய்ததில் வெள்ளைநிற முள்ளம்பன்றி மற்றும் டமரின் மங்கி என்று கூறப்படும் அரியவகை வெளிநாட்டு விலங்குகளை வைத்திருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக வாங்கி வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்றால் இரு நாட்டு அனுமதியும் பெற்றிருக்க வேண்டும் எனக்கூறிய அதிகாரிகள், இளைஞரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த விலங்குகளை இந்தியா கொண்டுவரும்போது முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றிதளும் இல்லை எனக்கூறப்படும் நிலையில் அந்த விலங்குகளை அதிகாரிகள் தாய்லாந்திற்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மத்திய வன விலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின் 2விலங்குகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விலங்குகளை கொண்டு வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories