December 8, 2025, 7:06 AM
22.7 C
Chennai

மழையால் குற்றாலம் பாபநாசம் குளுமையான காலநிலை.. அணைகளில் அதிக தண்ணீர்..

திருநெல்வேலி தென்காசி குமரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குற்றாலம் பாபநாசம் பகுதியில் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளா தமிழக மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மட்டுமே மழை பெய்து வந்த நிலையில் நேற்று தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

இதேபோல் கடனாநதி, கருப்பாநதி,
குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 37 அடியாக உள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 30 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 46. 50 அடியாகவும் உள்ளது.

நெல்லை தென்காசி குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.50 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2666 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக 2 கன அடி நீர் மட்டுமே மணிமுத்தாறு அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 229 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை வரை 63.78 அடியாக இருந்த நிலையில் இன்று 7 அடி உயர்ந்து 70.73 அடியாக உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

images 2022 05 19T125059.095 - 2025
images 2022 05 19T125028.145 - 2025
images 2022 05 18T171310.825 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories