முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு!

kalvettu - 2026

திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூரில் வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வரலாற்றுத் துறை மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் கி.பி. 9-10-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியர்களின் நடுகல்லினை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டானது 6 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது.

இக்கல்வெட்டின் வரிகளை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது.

அதில் இக்கல் வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டானது 2 ஊர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் புல்லன்சாத்தன் என்னும் வீரர் ஒரு ஊரை வென்று உயிர் நீத்தார் என்பதை கூறுகிறது.

kalvettu 1 - 2026

இதுவரையில் பாண்டியநாட்டில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ள இலுப்பையூர் கல் வெட்டாகும்.

மற்றொன்று இதே ஊருக்கு தெற்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு அருகிலுள்ள கரிசல்குளம் என்ற கிராமத்தில் உள்ள நடுகல் ஆகும்.

இது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. பசுக் கூட்டங்களை கவர்ந்து சென்றபோது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் தான் இது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் ராஜபாளையம் அருகே முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுகல்லானது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இம்மாவட்டத்தில் களப்பணியின் வாயிலாக முற்கால பாண்டியரின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories