TNPSC exam: பஸ் கிடைக்காமல் லேட்டா வந்த தேர்வர்கள்.. அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

Chinnamanur TNPSC - 2026

தேனி மாவட்டம் சின்னமனூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத வந்த மாணவர்கள் 9.01 க்கு தேர்வு மையத்திற்கு வந்ததால், தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2வில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வு மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்த நிலையில் இத்தேர்வு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

அதன்படி தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில்-3,799, உத்தமபாளையம் தாலுகாவில்-6,179, தேனி தாலுகாவில் 16,610 என 21,588 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும் எனவும் 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும், பிற்பகல் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு தேர்விற்கு விண்ணப்பித்து மாணவர்கள் தாமதமாக வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது .

ஒன்பது முப்பது மணி அளவில் நடைபெறும் தேர்விற்கு எட்டு முப்பது மணிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கட்டாய உத்தரவு விட்டதால் சின்னமனூர் தேர்வு மையத்தில் 8.59 மணி வரை கேட் திறக்கப்பட்டு, 9.00மணிக்கு மேலே பள்ளி வளாக கதவு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த தேர்வு மையத்திற்கு 9.01 க்கு வந்த மாணவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்காததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கிராமப் பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு வர சரியான நேரத்தில் பேருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்கு 9.01 மணிக்கு வந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனதால் மிகவும் சோகம் அடைந்தனர்.

தேர்வு மையத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத அலுவலர்களிடம் தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவர்கள் கெஞ்சினர். ஒரு நிமிடம் தாமதம் ஆனதால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக மாணவர்கள் கண்ணீர் விட்டனர்.

இதுகுறித்து தாமதமாக வந்த மாணவர்கள் கூறுகையில், ” 9.30 மணிக்கு தேர்வு நடைபெறும் என்பதால், நாங்கள் 9 மணிக்கே வந்து விட்டோம் . இந்தப் பகுதிகளில் உள்ள கிராம புறத்தில் இருந்து நாங்கள் தேர்வு எழுத வந்துள்ளோம் .

பேருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால் தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு வந்தடைந்தோம். எங்களது காரணங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் கூட ஒன்பது மணிக்கு மேல் தேர்வெழுத அனுமதி இல்லை என்று எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்தாண்டு தேர்வுக்கு நன்றாக படித்து தேர்வு எழுத வந்த பொழுது தேர்வு எழுத முடியாமல் போனதால் இனி அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories