December 6, 2025, 8:52 AM
23.8 C
Chennai

ஐந்தறிவுக்கு தெரிவது கூட ஆறறிவுக்கு தெரிவதில்லை: உபி போலீஸ் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு!

deer - 2025

சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நாடு தழுவிய அளவில் மத்திய, மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

மற்றொரு பக்கம், போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்கும் வகையில் கடுமையான அபராதங்களை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் விதிகளை மீறுபவர்கள் எப்போதும் போல தங்கள் அத்துமீறல்களை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

இதனால் காவல் துறையினர் அவ்வபோது புதுமையான முறையில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வது உண்டு.

உத்தரப் பிரதேச மாநில காவல் துறையினர் அண்மையில் சமூக வலைதளத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதில், சாலையை கடக்க முயலும் மான் ஒன்று, வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால் ஓரமாக காத்திருக்கிறது. சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து, கார் நின்ற பிறகு, அது பொறுமையாக சாலையை கடந்து செல்கிறது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள காவல் துறையினர், பொதுமக்களும் இதேபோல போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.

காவல் துறை ஷேர் செய்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் காவல் துறையினரின் புதுமையான முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், ” 5 அறிவு கொண்ட மான் கூட போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கிறது.

நாம் 6 அறிவு கொண்ட மனிதர்கள். நம்மால் ஏன் இதை பின்பற்ற முடியாது? தயவு செய்து அனைவரும், அனைத்து சமயத்திலும் சாலைப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்த அட்மின் யார் என்று தெரியவில்லை, இருப்பினும் அவர் பாராட்டுக்கு உரிய நபர் என்று மற்றொரு பயனாளர் கமெண்ட் செய்துள்ளார்.

பொதுவான போக்குவரத்து விதிகள்

சாலையில் பாதுகாப்பை உறுதி செய்ய சில பொதுவான விதிமுறைகளை நாம் கடைபிடிப்பது அவசியம்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும் இருவருமே கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோன் பயன்படுத்தக் கூடாது.

அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது.

சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் சமயங்களில் காத்திருக்க வேண்டும். பச்சை விளக்கு எரிந்த பிறகே வாகனத்தை இயக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories