ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகக் கூறி 5 வயது சிறுமி சாதனை!

Published:

athreyeikosh - 2026

5 வயது சிறுமி ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை ஒன்றை செய்துள்ளார்.

சிறு வயது முதலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

பல்வேறு பயிற்சிகள், வகுப்புகள் போன்றவற்றை ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விடுகின்றனர். குழந்தைகளும் இவர்களின் பயிற்சிகளுக்கு ஏற்ப அவற்றை கற்று கொள்கின்றனர்.
பெரும்பாலும் இன்றுள்ள குழந்தைகள் நாம் சொல்லி தருவதை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோல்டோரைச் சேர்ந்த அத்ரேயி கோஷ் என்கிற சிறுமி, ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.

இந்த சிறுமிக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. இவர் பாடுதல், நடனம் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் திறமையானவராக உள்ளார். அவரது தந்தை, அனிருத்தா கோஷ், மேற்கு வங்க காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தற்போது இவர் புருலியாவில் உள்ள டிஐபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுமி ஆத்ரேயியின் திறமையை தாய் சம்பாதி கோஷ் தான் கண்டறிந்து உள்ளார். சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related articles

Recent articles

spot_img