கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாடு துவக்கம்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை..

கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா சட்டசபையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

ஆழமான வேரூன்றிய சமூக தப்பெண்ணங்களால் தொழிலாளர்களில் பெண்களின் விகிதம் அவர்களின் சாத்தியக்கூறுக்கு அருகில் இல்லை, இது உலகளாவிய நிகழ்வு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியபோது தெரிவித்த அவர் மக்களின் மனநிலையில் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், நாட்டில் உள்ள பல்வேறு சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள சட்டமன்றத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் தனது தொடக்க உரையில், ஜனாதிபதி 1857 முதல் பெண்கள் “நட்சத்திர பங்கை” வகித்ததாக கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பல போராட்டங்களிலும் அவர்களின் பரவலான பங்கேற்பின் காரணமாக வெற்றி பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சபாநாயகர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த 2 நாள் மாநாட்டை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் குஜராத் மாநில சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், முன்னாள் எம்.பி. பிருந்தா காரத் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இந்தியாவிலேயே முதன்முதலாக நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் 17க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், அவரது மனைவி ரேஷ்மா ஆரிப், அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் பலர் வரவேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோரும் வந்துள்ளனர்.

kovind kerala - 2026
ram nath kovind president - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories