வருமானவரி தாங்கல்: UIDAI முக்கிய தகவல்!

- 2026

அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள்.

வருமான வரி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டு தொடங்கிய பிறகு, முந்தைய நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை மக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ​​ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆனால், ஆன்லைன் முறையில் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர் இ-சரிபார்ப்பை (ஐடிஆர் இ-வெரிஃபிகேஷன்) செய்வது கட்டாயமாகும்.

இது இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையானதாக கருதப்படாது. இது இல்லாமல் ஐடிஆர் செல்லாது. ஐடிஆர்-ஐ தாக்கல் செய்த பிறகு மின் சரிபார்ப்பு செய்ய விரும்பினால், ஆதாரைப் பயன்படுத்தலாம்.

யுஐடிஏஐ ட்வீட் செய்து தகவல் அளித்தது
ஐடிஆர்-ன் மின் சரிபார்ப்பு பற்றிய தகவல்களை அளித்து, ஆதார் மூலம் மின் சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

இதற்கு உங்கள் ஆதாரை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். இதனுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் உள்ளிட வேண்டும்.

ஆதார் அட்டை மூலம் ஐடிஆர்- ஐ சரிபார்க்கும் செயல்முறை இதோ:

இதற்கு முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இங்கே ‘லிங்க் ஆதார்’ என்ற இணைப்பைத் திறக்கவும்.

இங்கே ஆதார் எண்ணை உள்ளிட்டு பான் எண்ணைச் சரிபார்க்கவும்.

இதற்குப் பிறகு உங்கள் பான் மற்றும் ஆதார் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் இணையதளத்திற்குச் சென்று ஐடிஆர் படிவத்தை நிரப்பவும்.

இங்கே சரிபார்ப்பு (வெரிஃபிகேஷன்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.

ஓடிபி-ஐ உள்ளிட்ட பிறகு, சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு, வெற்றிகரமாக மின் சரிபார்க்கப்பட்டதற்கான அடையாளமான ‘ரிடர்ண் சக்சஸ்ஃபுலி இ-வெரிஃபைட்’ என்ற செய்தி திரையில் தோன்றும்.

இதனுடன் உங்கள் மின் சரிபார்ப்பு செயல்முறை நிறைவடையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories