மாலை மாற்றும் போது நடந்த சம்பவம்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

marriage 9 - 2026

கர்நாடகத்தில் திருமணத்துக்கு முன்பாக மாலை மாற்றும்போது மணமகன் கை கழுத்தில் பட்டதால் கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தாலிகட்டும் வேளையில் திருமணங்கள் நின்றுபோவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவு சரியில்லை, மணமகன், மணமகளின் ஆடை அலங்காரம் சரியில்லை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கூட திருமணங்கள் தடைப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தான் தற்போது கர்நாடகத்தில் ஒரு திருமணம் பாதியில் நின்றது.

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா மூடுகோனஜேவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராவி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் மே 25ல் நாராவியில் உள்ள மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர். திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

மே 25ல் திருமண மண்டபத்துக்கு மணமகன், மணமகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வந்திருந்தனர். சம்பிரதாய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

மணமக்கள் மாலை மாற்றி கொள்ள கூறினர். மணமகன் தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து மணமகள் கழுத்தில் போட்டார். அப்போது மணமகனின் கை, மணமகளின் கழுத்தில் பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மணமகள் தனது கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசியதுடன் மணமேடையை விட்டு வேகமாக வெளியேறினார்.

பிறகு தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்தும்படி கூறினார். இதனால் மணமகன் தரப்பு அதிர்ச்சியடைந்தது. அந்த பெண்ணிடம் அவரது குடும்பத்தினர் பேசியும் அவர் மனம்மாறவில்லை.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமண செலவை திரும்ப வழங்கும்படி மணமகன் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்குவாதம் முற்றியது. இதுபற்றி தகவலறிந்தவுடன் வேனூர் போலீசார் வந்தனர். அப்போது மணமகள் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூற, மணமகனும் தனக்கு இந்த பெண்ணுடன் திருமணம் வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால் திருமணம் நின்றது.

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டாருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைத்து அனுப்பினர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதற்கிடையே திருமணத்துக்காக சுமார் 500 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்த உணவு அருகே உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories