அதிர்ச்சி: 44 லட்சம் யூடியூப் சேனல்கள்.. 16 லட்சம் வாட்ஸ்அப்கள் முடக்கம்!

05 May27 youtube - 2026
05 May27 youtube e1539757713461

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

இனி வரும் காலங்களில் விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக தடை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது .

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது..

இதனிடையே இந்தியாவில் உள்ள புதிய ஐடி விதிகளின்படி, நாட்டில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்த மாதாந்திர அறிக்கைகளை வாட்ஸ்அப் வெளியிட்டு வருகிறது.

மேலும் இந்தியாவில் கலவரங்கள் உட்பட பல சட்டம் ஒழுங்கு சம்பவங்களுக்கு வழிவகுத்த தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புவதற்கான முக்கிய தளமாக வாட்ஸ்அப் மாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

whatsapp - 2026

அதன் பிறகு, வாட்ஸ் அப் பயன்பாட்டை தவறான முறையில் பயன்படுத்துவனதை தடுக்க பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும் வாட்ஸ்அப்பில் உள்ள சிக்கல்களை புகாரளிக்க பயனர்களை ஊக்குவிப்பதுடன், போலிச் செய்திகள் மற்றும் ஸ்பேம் செய்திகளை பற்றி மக்களை எச்சரிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் எந்தவொரு பயனரும் அதன் “சேவை விதிமுறைகளை” மீறுவதைக் கண்டறிந்தால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பின் “சேவை விதிமுறைகளின்” படி, கீழ்கண்ட விஷயங்களை செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் மார்ச் மாதத்தில் நாட்டில் இதுபோன்ற 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் கணக்குகளை முடக்க என்ன காரணம்..?

நீங்கள் ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து மற்றொரு நபரின் போலி கணக்கை உருவாக்கினால், உங்களின் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்.

உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கு நீங்கள் அதிகமான செய்திகளை அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.

WhatsApp Delta, GBWhatsApp, WhatsApp Plus போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தினால், உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம்..
பல பயனர்களால் உங்களை பிளாக் செய்தால், வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படலாம்.

உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு எதிராக பலர் புகார் அளித்தால், வாட்ஸ்அப் உங்களைத் தடை செய்யலாம்

பயனர்களுக்கு மால்வேர் அல்லது ஃபிஷிங் இணைப்புகளை அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.

வாட்ஸ்அப்பில் ஆபாச கிளிப்புகள், அச்சுறுத்தல் அல்லது அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம்

வாட்ஸ்அப்பில் வன்முறையை ஊக்குவிக்கும் போலி செய்திகள் அல்லது வீடியோக்களை அனுப்ப வேண்டாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories