ரயில் வரும் நேரம்.. தண்டவாளத்தில்.. கணப்பொழுதில் தப்பிய இளைஞர்கள்..!

Published:

train - 2026

ரயில் பாலத்தின் மீது அத்துமீறி நுழைந்ததால், 3 இளைஞர்கள் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..

கனடா நாட்டில் உள்ள டொராண்டோவில் உள்ள ஹம்பர் நதி ரயில் பாலத்தில் அனுமதியின்றி 3 சிறுவர்கள் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 20-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ, ஒருவர் ஓடும் ரயிலுக்கு முன்னால் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது, மற்றொருவர் வழியிலிருந்து வெளியேற மற்ற ரயில் பாதைகளை நோக்கிச் செல்கிறார்.

இந்த வீடியோவை மெட்ரோலின்க்ஸ் என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது, அதில், ‘இந்த இதயத்தை நிறுத்தும் வீடியோ, ரயில்வேயில் நடப்பதால் ஏற்படும் ஆபத்துகளை காட்டுகிறது.

டொராண்டோவில் உள்ள ரயில் பாலத்தில் அத்துமீறி நுழையும் போது இளைஞர்கள் பலத்த காயம் அல்லது மரணம் அடைந்து ஒரு அடிக்குள் வருவதைப் பாருங்கள். ரயில் பாதுகாப்பு பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

மெட்ரோலின்க்ஸ் வாடிக்கையாளர் பாதுகாப்புச் சேவையின் மேலாளர் ஸ்டீவ் வீர் இதுகுறித்து பேசிய போது ” அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தின் விளைவாக யாரும் காயமடையவில்லை, ஆனால் அதிகாரிகள் அந்த வழியாக சென்றவர்களின் அடையாளத்தை கண்டறிய முயன்றனர்.

இந்த இளைஞர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்டோர், ரயில்வே கடவு அல்லது அத்துமீறல் சம்பவங்களில் கடுமையாக காயமடைகின்றனர் அல்லது கொல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img