எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர் , நிறுத்தம் தேவை..

செங்கோட்டை ராஜபாளையம் வழியாக, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு இரயில்(06035/06036) நேற்று இரவு முதல் இயங்கி வரும் நிலையில் இந்த ரயிலுக்கு தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை நிறுத்தம் இல்லாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லீப்பர், 3அடுக்கு ஏ/சி,  2அடுக்கு ஏ/சி வகுப்புகள் உள்ளன.மத்திய கேரளா மற்றும் தமிழகத்தின் கிழக்கு டெல்டா மாவட்ட ஊர்களுக்கு நம் ஊர் வழியாக நேரடி இணைப்பு கிடைத்துள்ளது.இந்த விரைவு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டை, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ஆனால் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர்  நிறுத்தம் இல்லை என்பது ரயில் பயணிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட தலைநகரம்,சாரல் நகரம்
,அருவிகளின் மாவட்டம்
,செங்கோட்டை விருதுநகர் வழிதடத்தில் பயணிகள் எண்ணிக்கையிலும் வருவாயிலும் முதலிடம்,கேரளாவுக்கு செல்லும் ரயில்களுக்கான முதன்மையான சந்திப்பு,பராக்கிரம பாண்டியனால் கட்டியெழுப்பப்பட்ட தென்காசி காசிவிசுவநாதர் கோயில் கொண்ட நகரம் ,3000 ச. கிமீ பரப்பளவு கொண்ட மாவட்டம்
,15 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டம்
இதுவரை தென்காசியில்  எந்த ஒரு ரயிலும் நிற்காமல் சென்ற வரலாறு இல்லை 60 சதவீதம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட  தென்காசியில் ஒரு சிறப்பு ரயில் நிற்காமல் செல்லப் போகிறது என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று ஜூன் 4 ம் தேதி முதல் துவங்கி  ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை 10 சேவைகள் இயக்கப்பட இருக்கும், எர்ணாகுளம் –  வேளாங்கண்ணி -எர்ணாகுளம் ரயில் தென்காசியில் நிற்காது.மேலும் இந்த ரயில் தமிழகத்தில் மிக பிரபலமான கோயில் நகரம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவங்கையிலும் நிற்காது.இந்த ரயிலை தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை யில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எர்ணாகுளம்-நாகப்பட்டிணம் (வேளாங்கண்ணி) சிறப்பு இரயில்
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே இரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில் தற்காலிகமாக “எர்ணாகுளம்-நாகப்பட்டினம்” வரை மட்டுமே இயக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் இரயில் நிலையம் முதல் வேளாங்கண்ணி மாதா ஆலயம் – 13  கி.மீ.தூரம் மட்டுமே ஆகும்.விரைவில் வழக்கம் போல் வேளாங்கண்ணி இரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB IMG 1654419877735 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories