December 5, 2025, 9:21 PM
26.6 C
Chennai

இந்தோ-திபெத் எல்லைப்படையினர் 24 ஆயிரம் அடி உயர இமயமலை சிகரத்தில் ஏறி யோகா செய்து சாதனை..

உத்ரகாண்ட் இமயமலை பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப்படை ஐடிபிபி போலீஸார்  24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி யோகா பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐடிபிபி சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐடிபிபியின் மலையேற்றத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் குழு, கடல் மட்டத்திலிருந்து 22,850 அடி உயரத்தில் உள்ள மலை மீது யோகா பயிற்சி பற்றி செயல் விளக்கம் அளிக்கின்றனர். வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஐடிபிபி வீரர்கள் குழுவினர் 24,131 அடி உயரம் உள்ள அபி காமின் சிகரம் மீது ஏறி ‘பத்ரி விஷால் கி ஜே’ என கோஷமிட்டனர்.

இத்துடன் ஐடிபிபி குழுவினர் 230-க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாக மலையேறி சாதனை படைத்துள்ளனர். மத்திய இமயமலை பகுதியில் அபி காமின் சிகரம் அமைந்துள்ளது. இது காமெத் சிகரத்துக்கு அடுத்தபடியாக 2-வதுஉயரமான சிகரம் ஆகும்.

கடந்த 1962-ல் உருவாக்கப்பட்ட ஐடிபிபி படையின் மலையேற்றப் பிரிவினர் 1960-களின் இறுதியில் இமயமலையில் ஏறத் தொடங்கினர். ஒரே ஆண்டில் 9 சிகரங்களில் ஏறி சாதனை படைத்தனர். இமயமலைத் தொடரின் பல்வேறு கடினமான சிகரங்களில் இப்படைப் பிரிவினர் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்தோ-திபெத் எல்லை படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்கு சென்று இந்தோ-திபெத் எல்லை படையின் மலையேற்ற வீரர்கள் யோகா பயிற்சி செய்துள்ளனர். இது வீரர்களின் ஓர் அரிய முயற்சியாகும்.

இதற்கு முன்பு இவ்வளவு உயரத்திற்கு சென்று யோகா பயிற்சியை மேற்கொண்டு யாரையும் பார்த்தது இல்லை. இது தனித்துவம் வாய்ந்த சாதனை என தெரிவித்து உள்ளது.

மனித இனத்திற்கான யோகா என சர்வதேச யோகா தினத்திற்கான நடப்பு ஆண்டு கருப்பொருள் ஆக கூறப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்களை செய்து மக்கள் கட்டுடலுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற செய்தியை கூறுவதற்காக மிக அதிக உயரத்தில் அவர்கள் யோகா பயிற்சியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories