கேரளா தங்க கடத்தல் முதல்வர் பினராயி பதவி விலக காங்கிரஸ் போராட்டம்..

Published:

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திாி பினராயி விஜயன் பதவி விலக கோாி காங்கிரஸ் கட்சியினா் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் வெளியில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ள அவர், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், ரகசிய வாக்குமூலம் அளிப்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில், ரகசிய வாக்குமூலம் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனைத்தையும் கூற முடியாது என்றும், 2016ல் துபாய் சென்ற முதல்வர் பினராயி விஜயன், பையை விட்டுச் சென்றதாகவும், அதை துபாயில் டெலிவரி செய்ததாகவும் கூறினார். அந்தப் பையில் கரன்சி இருந்தது. மேலும், துணைத் தூதரகத்திலிருந்து பிரியாணி பாத்திரங்கள், முதலமைச்சரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டன. அதில் பெரிய எடையுள்ள உலோக பொருட்கள் இருந்தன. அப்படி பல முறை முதல்வர் வீட்டுக்கு பிரியாணி அனுப்பப்பட்டது.என்று ஸ்வப்னா கூறியுள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில், தங்க கடத்தல் வழக்கில் தொடா்பு உள்ளதாக கூறி கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராகவும் அவா் பதவி விலக கோாியும் மகளிா் காங்கிரசாா் போராட்டம் நடத்தினா்.

திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் அருகே இளைஞா் காங்கிரசாா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து போலீசாா் அவா்களை விரட்டி அடித்தனா்.

IMG 20220609 151158 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img