சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சா லையில் சனிக்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம டைந்து காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவம னையில் அனுமதிக்கப் பட்டனர். இதில் கூடுதல் சிகிச்சைக்காக ஒரு குழந்தை, தாய் மற்றும் ஒருவர் என 3 பேர் மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த 25-க் கும் மேற்பட்டவர்கள் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள நகர்பகுதியில் நடைபெறவிருந்த வளைகாப்பு நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்காக சுற்றுலா வேன் ஒன்றில் வந்தனர்.
வேன் காரைக்குடி -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பத்திரபதிவு அலுவலகம் அருகே தீயணைப்பு நிலையம் எதிரே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளா னது. இதில் மணிமேகலை (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தவப்பிரியா (22), பாப்பாத்தி (60) ஆகிய இருவரும் சிசிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். 4 குழந்தைகள் உள்பட 25 பேர் பலத்த காயத்துடன் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை, தாய் மற்றும் ஆண் ஒருவர் என மூன்றுபேர் கூடுதல் சிசிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி, குன்றக்குடி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





