தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 3,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் பலர் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டு க்கொண்டனர்.இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடக்கி மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ள நிலையில் முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவா்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 40 - 2026

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img