கும்பகோணம்-5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை..

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணமா செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சென்னையில் தங்கியிருந்த நிலையில் பிரச்சனை வேண்டாம் என கூறி சரண்யாவின் குடும்பத்தினர் அவர்களை விருந்துக்கு அழைத்தனர்.

இதனை ஏற்று சொந்த ஊர் வந்த தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த சரண்யா, அவரது கணவர் மோகன் ஆகியோர் ஊர் திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதால் சோழபுரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

TNJ honour killing nn - 2026
1655126118599 - 2026

2 போரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் தலைமறைவாகி உள்ளார். சரண்யாவுக்கு அவரது சகோதரர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்த நிலையில் காதல் திருமணம் செய்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சரண்யா – சேகர் ஜோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சரண்யா, கணவர் சேகரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் கீழ்க்கண்ட விபரம் தெரியவந்துள்ளது.

சரண்யாவின் காதல் அவரது வீட்டுக்கு தெரிய வந்ததால், அவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இதனை அறிந்த சரண்யா, கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, மோகனுடன் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல்  வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவரும் தண்ணீர் கொடுத்துள்ளனர்.  தண்ணீரை வாங்கி தம்பதிகள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமணத் தம்பதிகளை வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொலை சம்பவம் குறித்து சோழபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்ணின் சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

1655126132902 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories