சரத் பவாரை சந்தித்த மம்தா பானர்ஜி ..

இந்திய ஜனாதிபதியாக பணியாற்றி வரும் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார்? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. கேரள கவர்னரான ஆரிப் முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி 22 எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு

ன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. சரத் பவாரை எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத் பவார் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைமை தாங்குவதற்காக மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் இருந்து இன்று டெல்லி வந்தார்.

732163 pa - 2026

டெல்லி வந்த மம்தா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும்படி சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது அழுத்தமான முடிவில் இருந்து சரத் பவார் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories