அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது-ஜெயக்குமார்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் எனவும்,அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர். அ.தி.மு.க. தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும். ஒற்றை தலைமைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும். இன்று நடைபெற்றது கருத்துப் பரிமாற்றம் தான். கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு அழிவு என்பது கிடையாது என தெரிவித்தார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
500x300 1712428 jayak - 2026

Related articles

Recent articles

spot_img