பெரிய ஆழ்வார் ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 29-ல் துவக்கம்..

Published:

விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1719411 srvlillu - 2026

ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அதில் விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்கள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று திங்கட்கிழமை தொடங்கியது. தொடர்ந்து தேங்காய் தொடும் நிகழ்ச்சி, சேனைத்தலைவர் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வருகிற 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் பெரியாழ்வார் வீதி உற்சவம் நடைபெறுகிறது. 3-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந்தேதி செப்பு தேரில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img