December 7, 2025, 6:58 PM
26.2 C
Chennai

தொழில் ரீதியாக ரயிலில் பணம் கொண்டு வருபவர்களுக்கு உரிய ஆவணங்கள் அவசியம்..

உரிய ஆவணங்களின்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.2.64 கோடி ஹவாலா பணங்கள் பிடிபட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்ட வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது பையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (53) என்பதும் அவர் கருவாடு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும், அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது அதில் 78 லட்சம் ரூபாய் பணம் இருந்ததும், பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பிடிபட்ட நபரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஜூன் மாதத்தில் மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ. 2,64,19,500, மற்றும் 40 லட்சம் மதிப்புடைய தங்கமும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 90 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில் ரீதியாக பணம் கொண்டு வருபவர்கள் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாத பணம் எவ்வளவு மதிப்பாக இருந்தாலும் அது ஹவாலா பணம் என்ற அடிப்படையிலேயே கருதப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் எனவும் பின் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புப்படை டி.எஸ்.பி ராஜு தெரிவித்துள்ளார்.

1656606211850 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories