திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108திவ்ய தேசங்களில் ஒன்றான மலைநாட்டு திருப்பதி கமில் முக்கியமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

1500x900 758928 untitled 2 - 2026
samayam tamil - 2026

108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 29-ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணி நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள்ளா நேரத்தில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6.00 முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

tiruvattaru6 1657082516 - 2026
tiruvattaru1 1657082559 - 2026
tiruvattaru2 1657082551 - 2026

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கோவிலில் ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் மேற்கு நோக்கிப் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவ பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஆகிய திருத்தலங்களுக்கு முந்தைய பழைமையான கோயில் திருவட்டாறு. திருவட்டாறில் 22 அடி நீளத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கு, ஆதிகேசவர் எனப் பெயர் வந்ததற்கு புராண கால கதை ஒன்று சொல்லப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தினரின் குல தெய்வமாக விளங்கிய இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் 76வது கோயிலாகும். 13 மலையாள நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950 ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது.

Thiruvatar Adhikesava Perumal Temple 16570765303x2 1 - 2026
tiruvattaru5 1657082524 1 - 2026

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையான கோயில்.இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் வந்ததாம். பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோயில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாராம்.

படைப்புக்கடவுளான பிரம்மா யாகம் செய்ய நினைத்து அதை மகாவிஷ்ணுவிடம் கூறினார். யாகம் செய்தால் அது தீய விளைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்த மகாவிஷ்ணு அதை தடுக்க நினைத்தார். யாகம் நடத்த வேண்டாம் என்று கூறியும் மகாவிஷ்ணுவின் பேச்சை மீறி முனிவர்களை அழைத்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. யாக குண்டத்தில் நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது.அப்போது வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை அழைத்த மகா விஷ்ணு, பிரம்மா உச்சரிக்கும் மந்திரத்தை மாற்றி யாகத்தை நிறுத்து என்று உத்தரவிட்டார். பிரம்மாவின் நாக்கை பிறழச் செய்து மந்திரத்தை மாற்றி உச்சரிக்கும்படி செய்தார் சரஸ்வதி தேவி. மந்திரம் தவறாகக் கூறப்பட்டதால் எரிந்துகொண்டிருந்த அக்னி குண்டம் புகை மண்டலமாக மாறியது. அதிலிருந்து கேசன், கேசி என்ற அசுரர்கள் தோன்றினர்.

அசுரர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனது. சிவ பக்தர்களான அவர்களை அமைதியாக இருக்கும்படி பிரம்மா வேண்டினார். யாகசாலையில் அட்டகாசத்தை நிறுத்த வேண்டும் என்றால் சாகா வரம் வேண்டும் என்று கேசனும், கேசியும் கேட்டனர். அவர்கள் கேட்ட வரத்தை கொடுத்தார் பிரம்மா. மகேந்திரகிரி மலையில் குகைக்குள் சென்று இருந்த கேசன் அடிக்கடி தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தார்.

தேவர்களால் அந்த அசுரனை எதிர்கொள்ள முடியாததால் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு கேசனுக்கு எதிராக ஏழு ஆண்டுகள் யுத்தம் செய்தும் அழிக்க முடியவில்லை. கேசன் பெற்ற சாகாவரம் அவனை காத்தது. இறுதியில் விஸ்வரூபம் எடுத்தார் மஹாவிஷ்ணு. விஸ்வரூபத்தைப் பார்த்து கேசன் மயங்கி விழுந்தான். தான் பள்ளிகொள்ளும் பாம்பணையான ஆதிசேஷனிடம், கேசனைக் கட்டும்படி கூறினார் மகாவிஷ்ணு. மயங்கிக்கிடந்த கேசனை ஆதிசேஷன் பாம்பு சுற்றிக் கட்டியது. சற்றும் தாமதியாமல் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டுவிட்டார்.

மயக்கம் தெளிந்த கேசன் பன்னிரண்டு கைகளை வெளியே நீட்டித் தொல்லைகள் செய்தான். சிவ பக்தனான கேசனின் கைகளில் 12 சிவ லிங்கங்களைக் கொடுத்தார் மஹாவிஷ்ணு. இதனால் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தைக் கூறியபடி பெருமாளின் கீழே அடங்கிக் கிடக்கிறார் கேசன் என்கிறது புராண கதை. சாகாவரம் பெற்று அட்டகாசம் செய்த கேசனை அடக்கிய திருத்தலம் திருவட்டாறு என்றும். கேசனை அடக்கிய பெருமாளுக்கு ‘ஆதி கேசவன்’ எனப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

tiruvattaru3 1657082542 - 2026

சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories