குற்றாலத்தில் நாளை முதல் படகு சவாரி ..

குற்றாலத்தில் உச்சகட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.

images 38 - 2026

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கும் முக்கிய அம்சமாக படகு சவாரி திகழ்கிறது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வெண்ணமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதமே சீசன் துவங்கிய நிலையில் படகு குழாமில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜூன் மாதம் குறிப்பிடத்தக்க அளவில் மழை இல்லாததால் குளம் நிரம்பவில்லை. இதனால் படகு சவாரி துவங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் கொட்டும் தண்ணீரால் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து சுற்றுலாத்துறையினர் படகு சவாரியை நாளை முதல் துவக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகள் பராமரிக்கப்பட்டு உயிர்காக்கும் ஜாக்கெட் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது 2 இருக்கை மிதி படகுகள் 7ம், 4 இருக்கை மிதி படகுகள் 17ம், 4 இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் சவாரி செய்யும் வகையில் ஹயாக் வகை படகுகள் 4ம் என 33 படகுகள் தயாராக உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories