ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவம் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.

FB IMG 1658809979572 1 - 2026
IMG 20220726 WA0010 - 2026

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே பரவியிருந்தது. திருமலை, திருக்கடல் மல்லை, திருவிட வெந்தை,
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் போன்றவை தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்தன. வராஹப் பெருமான் பிராட்டிக்கு பல்வேறு உபதேசங்கள் செய்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த உபதேசங்கள் மக்களிடம் சென்றடைய ஆண்டாளாக அவதரிக்கப் போவதாக வேண்டினாள் பிராட்டி. இத்தலத்தில் மூங்கில்குடி என்ற வம்சத்தில் முகுந்தர் என்பவருக்கு 4-வது மகனாக பெரியாழ்வாராக கருட பகவான் அவதரித்தார். நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்த பெரியாழ்வார், அங்கிருந்த திருத்துழாய்ச் செடியின் அடியில் ஆடிப் பூரத்தில் அவதரித்திருந்த பெண் மகவைக் கண்டு வியந்தார். வந்திருப்பது திருமகளேயென உணர்ந்தார். தமது பத்தினியான விரஜையிடம் கொடுத்து கோதை என பெயர்சூட்டி வளர்த்தார். ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை24,இல் தொடங்கியது. பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிகின்றனர். 28ம் தேதி கருட சேவை. ஆகஸ்ட் 1ம் தேதி தேர்த்திருவிழா. 10 நாட்களும் தங்கி ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க தகுந்த வசதிகள் இந்து அறநிலையத்துறை பாகவத உத்தமர்களால் செய்யப்பட்டு உள்ளன.

IMG 20220726 WA0009 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் உற்சவத்தில் இன்று 3ம் திருநாளான காலையில்
ஆண்டாள்,  பெருமாள் பல்லக்குகளில் எழுந்தருளினர்.

இரவில் தங்க பரங்கி நாற்காலியில் ஆண்டாள் , அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தரும் காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்புத்தூரில் குழுமியிருந்தனர் .ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று 2ம் திருவிழாவான காலையில்
ஆண்டாள் தங்கப் பல்லக்கு, பெருமாள் தந்தப் பல்லக்கில் எழுந்தருளினர். இரவில் சந்திர பிரபை மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர்.

IMG 20220726 WA0011 - 2026
IMG 20220725 WA0026 - 2026

கண்ணபிரானை எண்ணி பாவை நோன்பு மேற்கொண்ட ஆண்டாள் நாச்சியார், கிருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கண்ணபுரம் குறித்து
நாச்சியார் திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கண்ணபுரத்தில் நீலமேகப் பெருமாள், கண்ணபுர நாயகியுடன் எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் சௌரி ராஜன். ‘திருவேங்கடத்திலும், திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னோடு சேர்த்துக் கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே’ என்பது ஆண்டாள் பாசுரத்தின் எளிய விளக்கம்.

நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை அழகர் குறித்து ஆண்டாள் 11 பாடல்கள் பாடி உள்ளார். ‘நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு’ என்கிற பாசுரம் மூலம் அழகருக்கு 100 தடா வெண்ணெயும், 100 தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாக ஆண்டாள் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துதான் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அழகர் கோயிலில் அமர்ந்த நிலையில் ஆண்டாள் சேவை சாதிப்பது அரிய திருக்காட்சியாகும்.

IMG 20220725 WA0026 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories