சதுரகிரி மலையில் திடிரென்று பெய்த மழை பக்தர்கள் அவதி…

1737560 sathuragiri - 2026

சதுரகிரி மலையில் திடிரென்று பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது.பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்ததால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சதுரகிரி மலையில் இரவு மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாைதகளில் தீயணைப்பு வனத்துறையினர், போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 3 மணியுடன் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் தொடர்ந்து அடிவாரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதே போல் வருசநாட்டு மலைப்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அடிவாரத்திற்கு இறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவித்தனர். தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அந்தப்பகுதிகளை கடக்க முடியாமல் அங்கேயே தடுத்து நிறுத்தப்படட்னர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பலமணி நேரம் ஒரே இடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

நள்ளிரவு நேரத்தில் ஓடைகளில் தண்ணீர் சற்று குறைந்தவுடன் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பக்தர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மழை பெய்ததால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் கனமழையால் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். இன்று காலையும் சதுரகிரி செல்ல தாணிப்பாறை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories