கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகு: வேதாரண்யம் அருகே மீனவர் இருவர் நீந்தி கரை சேர்ந்தனர்.

இலங்கையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு நீந்திய இரண்டு மீனவர்கள் வேதாரண்யம் அருகே இன்று செவ்வாய்க்கிழமை பகலில் கரை சேர்ந்தனர்.
மீனவர்கள் இருவரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு காற்றின் வேகத்தால் கவிழ்ந்தது. சிறு தலைக்காடு மீனவ கிராமத்தில் கரை சேர்ந்த இரு மீனவர்களையும் மீட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




