
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சற்று முன் திறக்கப்பட்டுள்ளது.நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.
ஸ்ரீகோயில் கூரையில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணியும் துவங்கியுள்ளது.
சபரிமலை மூலஸ்தானம் அமைந்துள்ள ஸ்ரீகோயில் கூரையில் பழுது ஏற்பட்டு மழை நீர் கோயிலுக்குள் வந்தது. இதை சீரமைக்க ஐயப்பனின் அனுமதியும், தந்திரியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இன்று காலை ஸ்ரீகோயிலின் கூரைகள் பிரிக்கப்பட்டு பழுது நீக்கும் பணி துவங்கும். 45 நாட்கள் வரை இப்பணி தொடர்ந்து நடக்கும். ஸ்ரீகோயிலின் கூரை தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளதால் பழுது நீக்க தேவையான தங்கம் மற்றும் தொகை தேவசம்போர்டு நிதியில் இருந்து செலவு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.
இப்பணிகளுக்காக தேவசம்போர்டு கமிஷனர் மற்றும் நிர்வாக அதிகாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று வேறு பூஜைகள் ஏதும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.




