கர்நாடக அணை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்: தேமுதிக உறுப்பினருக்கு முதல்வர் பதில்

Published:

சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று தேமுதிக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ., பார்த்திபன் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக பிரதமருக்கும், மத்திய நீர்பாசனத் துறைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல், மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img