மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்-வானதி சீனிவாசன் எம்எல்ஏ

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவானது, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கடந்த ஓர் ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 13 முதல் 15-ந் தேதி வரை வீடு தோறும் தேசிய கொடியேற்றும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிருக்கான 4 சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில், பா.ஜ.க. மகளிரணியினர் கலந்து கொண்டு 75 கார்களில் பா.ஜ.க. தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு சுந்தர் தலைமையில் தேசிய கொடி ஏந்தியபடி வாகன பேரணி மேற்கொண்டனர்.

பேரணியை பா.ஜ.க. அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். கார் பேரணியானது சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடங்கி, மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் வழியாக கானத்தூர் வரை நடைபெற்றது. பேரணி நிறைவில், கானத்தூர் அருகே உள்ள கிராம மக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் தி.மு.க.வினருக்கு தேசிய கொடி மீதோ, தேசிய ஒற்றுமை மீதோ முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பல்வேறு நேரங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தற்போதும் வீடு தோறும் தேசிய கொடியேற்றுவதற்கான தீவிரமான முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பார்க்க முடியவில்லை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் முன்னணியில் நின்று மக்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். இதனை தமிழகத்தின் மக்களாக நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கிறோம். 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, தேசத் தியாகிகளை போற்றுகின்ற வகையில் அவர் சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

809528 untitled 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories