எர்ணாகுளம் வேளாங்கன்னி இடையே செங்கோட்டை வழி மேலும் ஒரு சிறப்பு இரயில்..

Published:

எர்ணாகுளம் வேளாங்கன்னி எர்ணாகுளம் இடையே மேலும் ஒரு சிறப்பு இரயில்- கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது.

ஏற்கனவே கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில்(06035/06036) பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ஒரு வாராந்திர இரயில் சனிக்கிழமை எர்ணாகுளத்திலும் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி மில் புறப்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஒரு புதிய வாராந்திர சிறப்பு இரயில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயிலாக(06039/06040) செங்கோட்டை ராஜபாளையம் வழியாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் என்ற புதிய வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

15-ஆகஸ்ட்-22 முதல் 05-செப்-22 வரை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06039) வழி: புதுக்கோட்டை, தஞ்சாவூர்
ராஜபாளையம் வழி திங்கட்கிழமையில் இயங்கும்.

16-ஆகஸ்ட்-22 முதல் 06-செப்-22 வரை வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06040) வழி: கொல்லம், கோட்டயம் செங்கோட்டை ராஜபாளையம் புதன்கிழமை இயங்கும்

தஞ்சை வழியாக புதிய வழித்தடத்தில் இந்தச் சிறப்பு வண்டி இயக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு இந்த இரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB IMG 1660029272896 - 2026
tambaram kollam spl train2343 1522393916 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img