மே.வ -ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் திகிலூட்டும் தகவல்கள்..

images 20 1 - 2026

அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 2016 – 2019ஆம் ஆண்டுக்குள் அதாவது வெறும் 3 ஆண்டுகளில் ஏராளமான வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.500 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்திருக்கும் புதிய தகவலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

அவ்வளவு ஏன், கடந்த மாதம் இருவரும் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு கூட, ரூ.1.5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணையில், சட்டர்ஜியின் மனைவி பப்ளி, மகள் சோஹினி, மருமகன் கல்யாண்மோய் பட்டாச்சார்யா ஆகியோரும், சந்தேகத்துக்கு உரிய பல நிறுவன விவகாரங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

images 4 - 2026

அர்பிதாவின் பெயர் மற்றும் சோதனை நடத்தப்பட்ட ஒரு குடியிருப்பின் முகவரியில் ஒரு ஷெல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் மூலமும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு என்று அலுவலகமோ, ஊழியர்களோ இருந்திருக்கவில்லை என்று அமலாக்கத் துறை கூறகிறது.

இந்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதியிலிருந்து  இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனர்.

அவர்களது காவல் முடிந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து,  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு வங்க அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், சட்விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அர்பிதாவுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகை, தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories