


சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இந்த ஆண்டு்க்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், இதையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர். விழாவையொட்டி இன்று, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.மேலும் 6 கால பூஜைகளும் நடக்கிறது. அதாவது, காலை 7, 9, 11 மணி அளவிலும், மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி அளவில் ஆறுகால பூஜைகள் நடைபெறும். பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 11 மணி வரை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் உற்சவர் மாரியம்மன் கும்ப பூஜை, யாக பூஜை நடைபெற்று சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.




