கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது. அவர், வெற்றியின் நினைவாக இவற்றை சேகரிப்பது வழக்கம். அது போன்ற பழக்கத்தில், கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தோனி ஸ்டம்ப்களின் மேலிருக்கும் பயில்ஸ்ஸில் ஒன்றை நினைவாகப் பாதுகாக்க எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த நடுவர் இயன் கோல்ட், தோனியிடம் ஒரு சில வார்த்தைகளைப் பேச பயில்ஸை அவர் மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டார். இதற்குக் காரணம், அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இப்போது உள்ளன என்பதே. இப்போது பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்கள் எல்.இ.டி. ஹை-டெக் ஸ்டம்ப்கள். இதன் விலை சுமார் ரூ.24 லட்சம். 2 பயில்ஸ்களின் விலை சுமார் ரூ.50,000. எனவே வெற்றியின் நினைவாக ஸ்டம்ப்களையோ, அல்லது பயில்ஸ்களையோ எடுத்துச் செல்ல ஐசிசி-யிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.
வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!
Popular Categories


