எலி மருந்து சாப்பிட்ட 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..

images 38 3 - 2026

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எலி மருந்து சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் இன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி, வாழப்பாடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால்,  நான்கு மாணவிகளும் விடுதியில்  இருந்து சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். நான்கு மாணவிகளும் அவரவர் வீட்டிற்கு செல்லாமல், இவர்களோடு விடுதியில் தங்கி பயிலும் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின்  வீட்டிற்கு சென்று விட்டு, மறுநாள் தமது வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 

திங்கள்கிழமை வீட்டிலிருந்து விடுதிக்கு வந்த இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல், முருகன் கோவிலுக்கு சென்றதாகவும், இதனையறிந்த பெற்றோர்கள், மாணவிகளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவிகள் நால்வரும், திங்கள்கிழமை இரவு விடுதியில் எலி மருந்து சாப்பிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை வாந்தி எடுத்துள்ளனர். இதனைக்கண்ட விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் மாணவிகள்,  நால்வரையும் அழைத்துச் சென்று வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

மாணவிகளை பரிசோதித்த மருத்துவர்கள், நால்வரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் நான்கு மாணவிகள் எலி மருந்து சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories