அயோத்தி ராமர் கோவில் அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..

500x300 1753284 ayodhya ram temple - 2026

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது. இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர், கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார். தினந்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார். சம்பத் ராய் கூறியதாவது:- கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது. 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கோவில் பணிமனையில், கோவில் கட்டுமானத்துக்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், அந்த இடத்துக்கும் சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:- ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரமாண்டமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள்கள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர். ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில், சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக வழியில் உள்ள கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முதலில், இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதிலும், தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும், வீடுகளையும் இடிக்கிறார்கள்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories